×

குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

பேரையூர், மே 5: பேரையூர் அருகே குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக பலியானார். பேரையூர் அருகேஅத்திபட்டியை சேர்ந்த வேலு மகன் முருகன் (54). இந்நிலையில் குடிப்பட்டி பிரிவில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. முருகன் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தார். இதன்படி நேற்று முன்தினம் கட்டுமான பணிகள் நடைபெறும் தொட்டின் மேல் பகுதியில் சென்ட்ரிங் கம்பிகள் கட்டிக்கொண்டிருந்த முருகன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருடன் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Peraiyur ,Peraiur ,Murugan ,Velu ,Butipatti ,Dinakaran ,
× RELATED பேரையூர் அருகே கனமழைக்கு 6 ஏக்கர் வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை